Skip to main content

இந்தியாவில் ஒரு நாள் வர்த்தகத்திற்கான 5 சிறந்த கிரிப்டோகரன்சிகள் (2022) (5 Best Cryptocurrencies For Day Trading In India 2022)

By ஏப்ரல் 21, 2022மே 30th, 20225 minute read
Best cryptocurrencies for day trading in India (2021)-WazirX

குறிப்பு: இந்த வலைபதிவு ஒரு வெளிப்புற பதிவரால் எழுதப்பட்டது இந்த போஸ்ட்டில் வெளிப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் மற்றும் கருத்துக்கள் ஆசிரியருக்கே சொந்தமானது.

கடந்த சில ஆண்டுகளாக, கிரிப்டோகரன்சி உலகம் முழுவதும் பெரும் பெயரைப் பெற்றுள்ளது. எலோன் மஸ்க்கின் ட்விட்டர் போஸ்ட் முதல் உங்கள் உயர்நிலைப் பள்ளியின் சிறந்த நண்பரின் ஃபேஸ்புக் வால் வரை எல்லா இடங்களிலும் கிரிப்டோ தோன்றியுள்ளது. ஏன் இருக்கக்கூடாது? எல் சால்வடாரில்  சட்டப்பூர்வ நாணயமாக பிட்காயினைச் சேர்த்திருப்பது  அசல் கரன்சிகளுக்கு மாற்றாக கிரிப்டோகரன்சிகளைக் கொண்டு வந்துள்ளது

கிரிப்டோகரன்சிகள் அதிகம் பிரபலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணம், அவற்றின் அதிக ஏற்ற இறக்கமுள்ள தன்மையாகும். அதன் ஏற்ற இறக்கம் கிரிப்டோக்களை ஒரு உற்சாகமான குறுகிய கால முதலீட்டு மாற்றீடாக ஆக்குகிறது. உண்மையில், இந்தியாவில் விரிவடைந்து வரும் கிரிப்டோ சந்தையில், பல வர்த்தகர்கள் ஒரு நாள்-வர்த்தகத்திற்கு கிரிப்டோகரன்சிகளுக்கு மாறி வருகின்றனர். எனவே அதிகம் கவலைப்படாமல், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சிகளாக மாறும் திறனைக் கொண்ட கிரிப்டோகரன்சிகள் எவை என்று பார்ப்போம். ஆனால் அதற்கு முன்பாக, உங்கள் கிரிப்டோ மற்றும் வர்த்தக அறிவைக் கூர்மைப்படுத்த முக்கியமான சில விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

ஒரு நாள் வர்த்தகம் என்றால் என்ன? 

ஒரு நாள் வர்த்தகம் என்பது ஒரு வர்த்தக நடைமுறையாகும், இதில் ஒரு வர்த்தகர் ஒரு நிதி முதலீட்டை வாங்கிய அதே நாளில் விற்று விடுகிறார். பங்குச் சந்தையிலும் இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாள் வர்த்தகத்தில் லாபத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் பல நுட்பங்கள் உள்ளன, இவை இன்ட்ராடே உத்திகள் எனப்படுகின்றன. இவை ஏற்ற இறக்கமுள்ள சந்தையில் லாபம் ஈட்ட உதவுகின்றன. நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகர்களை,  ஊக வணிகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

Get WazirX News First

* indicates required

இது மிகவும் லாபகரமான தொழிலாகக் கருதப்பட்டாலும், ஒரு நாள் வர்த்தகம் ஆரம்பத்தில் மிகவும் சவாலானதாக இருக்கும். அதன் சாத்தியமான ஆபத்து மிகுதி காரணமாக இது பெரும்பாலும் சூதாட்டத்திற்கு சமமானதாக கருதப்படுகிறது. இருந்தாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தேவையானது சொத்துக்கள் பற்றிய நல்ல அறிவு, சிறிது சமநிலை நோக்கு, சுய ஒழுக்கம் மற்றும் சிறந்த டீல்களை பெறுவதற்கான கொஞ்சம் அதிர்ஷ்டம். இது ஏற்ற இறக்கங்களை உங்கள் நன்மைக்கேற்ப வளைந்து கொடுக்கிறது!

ஒரு நாள் வர்த்தகத்திற்கான கிரிப்டோகரன்சிகளை தேர்வு செய்வது எப்படி? 

கிரிப்டோகரன்சிகளின் விலை நகர்வை மூன்று காரணிகள்  தீர்மானிக்கின்றன. அவை – ஏற்ற இறக்கம், அளவு, மற்றும் காயினின் தற்போதைய செயல்பாடு. ஒரு நாள் வர்த்தகத்திற்கான நல்ல கிரிப்டோவைத் தீர்மானிக்கவும் மற்றும் ஒரு நாள் வர்த்தகத்திற்கான கிரிப்டோவை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை அறியவும், இந்த மூன்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

1. ஏற்ற இறக்கம்

இது  கிரிப்டோகரன்சியின் விலையில் தினசரி ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கிரிப்டோ என்பது பொதுவாக மிகவும் ஏற்ற இறக்கமுள்ள சந்தையாகும். எனவே, நீங்கள் 10% முதல் 50% வரை விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் – அதிக ஏற்ற இறக்கம், அதிக லாபம். இருப்பினும், இந்த முதலீட்டில் அதிக ஆபத்தும் உள்ளது என்பதை ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும். 

 கிரிப்டோகரன்சி சந்தையில் நுழைய விரும்பும் ஒரு வர்த்தகர், விலை ஏற்றத்துடன் இருக்கக்கூடிய ஒரு சொத்தில் தனது பணத்தை முதலீடு செய்ய விரும்புவார். இதைச் செய்வதன் மூலம், சொத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது, நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

2. அளவு

கிரிப்டோகரன்சியைச் சுற்றி என்ன வகையான செயல்பாடு நடக்கிறது என்பதை அதன் அளவே தீர்மானிக்கிறது. போதுமான நபர்கள் அந்த  கிரிப்டோகரன்சியை வாங்குகிறார்களா அல்லது விற்கிறார்களா என்பதை அதன் அளவே தீர்மானிக்கிறது. அதிக வர்த்தக அளவு என்பது அதிகமான மக்கள் வாங்குகிறார்கள் என்பதைக் குறிக்கிறது மற்றும் நேர்மாறாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதிக அளவு தொழில்நுட்ப குறிகாட்டிகளை மிகவும் நம்பகமானதாக ஆக்குகிறது மற்றும் விலைகளில் எதிர்பாராத ஏற்றம் அல்லது சரிவுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

3. தற்போதைய செய்திகள்

கிரிப்டோ அதைச் சுற்றி நடக்கும் விவாதங்களால் ஆழமாக பாதிக்கப்படுகிறது. சில சமயங்களில், அதற்குச் சம்பந்தமே இல்லாத சில விவாதங்களாலும் கூட. உதாரணமாக, எலோன் மஸ்க் ஒரு ஷிபு நாய்க்குட்டியை சொந்தமாக வைத்திருக்க விரும்புவதாக ட்வீட் செய்தபோது SHIB நாணயங்களின் விலை உயர்ந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். கிரிப்டோ முதலீடுகளில் வெற்றிபெற, நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். கிரிப்டோவின் நிறுவனர்களைப் பற்றிப் படிப்பது, சமூக ஊடகங்களில் அவர்கள் ஈடுபடும் உரையாடல்களைக் கண்காணிப்பது மற்றும் கிரிப்டோகரன்சி பற்றிய புதிய விவாதங்களைக் கவனிப்பது பலனளிக்கக்கூடும். இந்தியாவில் அடுத்த பிரபலமாகக்கூடிய கிரிப்டோகரன்சியைத் தீர்மானிக்க இது உதவும். 

இந்தியாவில் ஒரு நாள் வர்த்தகத்திற்கான 5 சிறந்த கிரிப்டோகரன்சிகள்

இது விவாதத்தின் முக்கியமான பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. முக்கிய கிரிப்டோ சொத்துக்கள் குறித்து நாம் இப்போது பார்ப்போம்.

#1 எத்தீரியம் 

எத்தீரியம் சந்தையில் மிகவும் பிரபலமான ஒரு ஆல்ட்கயின் ஆகும். எத்தீரியத்துக்கான தேவை ஒருபோதும் நின்றதில்லை, இது 2021இல் அதன் அற்புதமான விலை வளர்ச்சி மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. கிரிப்டோ உலகில் உள்ள ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் dApps சந்தையை ஆட்சி செய்வது இதுவாகும் , இது முந்தைய ஆண்டில் விலையைக் காட்டிலும் வியக்கத்தக்க  வகையில்  425% ஆக வளர்ந்தது. 

இது மட்டுமல்லாமல், எத்தீரியம் நல்ல ஏற்ற இறக்கத்தை வழங்குகிறது மற்றும் கணிசமான லாபத்தை விரைவாக அடைய சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது. சுவாரஸ்யமாக, எத்தீரியம் 2022இல் ஒரு கடுமையான மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது, இந்த பிளாக்செயின் இந்த ஆண்டு ETH-2 புரோட்டோகாலை ஏற்க உள்ளது. இந்த ஏற்றுக்கொள்ளலுக்கான விளைவுகள் குறித்து தொழில்துறையில் எந்த தெளிவும் இல்லாததால், இது சந்தையில் எத்தீரியத்தின் ஏற்ற இறக்கத் தன்மையை இன்னும் தூண்டுகிறது. ஒரு நாள் வர்த்தகத்திற்கான கிரிப்டோகரன்சிகளைத் தேடும் போது எத்தீரியத்தை அதிகம் நாடுவதற்கான அனைத்து கூடுதல் காரணங்களும் உள்ளன!

#2 மேட்டிக்

மேட்டிக் இந்த ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாகும். இது 1 ஜனவரி 2021 அன்று  $0.01இல் இருந்து 2021இன் பிற்பகுதியில் $2.9ஆக விலை உயர்வைக் கண்டுள்ளது. இப்போது, ஒரு நாள் வர்த்தகத்திற்கு மேட்டிக் ஏன் இவ்வளவு லாபகரமான தேர்வாக இருக்கிறது? பல முன் கணிப்பு சேவைகள் மேட்டிக் மீது 2022 மற்றும் அதற்கு அப்பாலும் ஒரு ஏற்றமான பார்வையை கணித்துள்ளன. ஜனவரி 2022இன் இறுதியில், நாணயம் மெதுவாக சரியத்தொடங்கியது.

இதுதான் இதை இந்தியாவில் வேகமாக வளரும் கிரிப்டோகரன்சியாக மாற்றியது! எத்தீரியத்தின் வரவிருக்கும் மேம்படுத்தலின் பின்னணியில் மேட்டிக்கின் பிளாக்செயினான பாலிகன் பற்றிய சலசலப்பு அதிகரித்து வருகிறது. அதன் சரிவு சிறிது சிறிதாக விலகிச் செல்லும்போது இந்த நாணயம் தொடர்ந்து வளரும். உங்கள் ஒரு நாள் வர்த்தக நிலையை மேம்படுத்த மேட்டிக்கை வாங்குவதற்கு WazirX க்கு செல்லவும் 

#3 சொலானா (SOL)

சோலனா 2021இல் ஒரு முக்கிய கிரிப்டோகரன்சியாக ஆனது. இந்த வருடத்தில் சொலானா 11,000% விலை உயர்ந்து, கிரிப்டோ சந்தை மூலதனத்தின் மூலம் இது 5வது பெரிய கிரிப்டோ சொத்தின் நிலைக்கு வளர்ந்திருக்கிறது! இந்த கிரிப்டோ அதன் வேகமான பரிவர்த்தனைகள் மற்றும் குறைந்த செலவின் காரணமாக ‘எத்தீரியம்-கில்லர்’ என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் ஆற்றல் வாய்ந்த இதன் வரலாறு, ஒரு நாள் வர்த்தகத்திற்கான சிறந்த கிரிப்டோகரன்சிகளின் ஒரு தகுதியான பகுதியாக  இதை மாற்றுகிறது இதோ இதனால்தான். புதிய திட்டங்கள் இந்த பிளாக்செயினில் இணைவதால், சோலனா சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. NFT பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்த மிகவும் விரும்பப்படும் கிரிப்டோகரன்சிகளில் சோலானாவும் ஒன்றாகும். இவை அனைத்தும் சோலானாவின் ஏற்ற இறக்கத்தை மேலும் அதிகரிப்பதால், இது இந்தியாவில் ஒரு நாள் வர்த்தகத்திற்கான சிறந்த கிரிப்டோகரன்சியாக அமைகிறது.

#4 ரிப்பிள் (XRP)

தற்போது ₹61.89 விலையில் உள்ள ரிப்பிள் அதன் மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவான முதலீடாகும். 2021இல் இந்த நாணயத்தின் விலை குறையத் தொடங்கிய போதிலும், ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட இந்த கிரிப்டோ சொத்திற்கு  மிக மோசமான நிலை ஒன்றும் இல்லை. ரிப்பிளுக்கு சந்தை விலை சரிந்து இருந்தாலும், இது அதற்கு ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே இருக்கலாம்.

வரும் மாதங்களில் ரிப்பிள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு ரிப்பிள் மற்றும் அதன் நிறுவனர்களுக்கு எதிரான SEC வழக்கு காரணமாகும். சரியாகச் சொல்லப்போனால், சந்தையில் முதலீட்டாளரின் உணர்வே ஒரு சொத்தின் விலையை நிர்ணயிக்கிறது. கிரிப்டோகரன்சிகளுக்கும் இது பொருந்தும். அது இன்னும் ரிப்பிளுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இருப்பினும், 2022ஆம் ஆண்டின் மத்தியில் நிலைமைமாறும் என்றுநிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரிப்பிள் குழு SECக்கு எதிரான அவர்களின் நிலைப்பாட்டில் உற்சாகமாக உள்ளது, மேலும் இது ஏற்கனவே சந்தை உணர்வை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது. முன்னணி வங்கிகளுடனான புதிய ஒப்பந்தங்கள் ரிப்பிளின் விலையின் முக்கிய இயக்கிகள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் 2021இல், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியானHDFC வங்கி லிமிடெட் ரிப்பிள்நெட்டில் இணைந்தது. மேலும் வங்கித் துறையும் இந்தச் சொத்துக்களுக்குப் பின்னால் அணி திரள்கிறது. இந்தியாவில் ஒரு அதிர்வை தரும் அடுத்த சாத்தியமான கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக ரிப்பிள் இருக்கலாம்.

#5 பினான்ஸ் காயின் (BNB) 

பினான்ஸ் காயின் சந்தையில் மூன்றாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது மற்றும் இருப்பவற்றிலேயே மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேன்ஜால் ஆதரிக்கப்படுகிறது – பினான்ஸ். உலகளாவிய கிரிப்டோ சந்தையில் பினான்ஸ் ஆதிக்கம் செலுத்துவதால், பினான்ஸ் காயின் ஒரு நாள் வர்த்தகத்திற்கான பாதுகாப்பான முதலீடாகும். இதோ இதனால்தான்.

கேமிங் மற்றும் விவசாயத்தின் அடிப்படையில் வளர்ந்து வரும் NFT துறையில் பினான்ஸ் அதிக பங்கு வகிக்கிறது. பான்-கிரிப்டோ தொழிற்துறையின் எந்தவொரு தயாரிப்புப் பகுதியின் வர்த்தகத்திலும் நீங்கள் பங்கேற்கக்கூடிய தளங்களை இந்த எக்ஸ்சேஞ்ச் வழங்குகிறது. இது BNBக்கான தேவை அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறியாகும்.

இந்த கிரிப்டோகரன்சியில் வெற்றிகரமாக முதலீடு செய்ய, அதனுடன் தொடர்புடைய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தொடர்பான செய்திகளை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், எக்ஸ்சேஞ்சின் எந்த நடவடிக்கையும் நாணயத்தின் விலையை கணிசமாக பாதிக்கும். சுவாரஸ்யமாக, இந்த நாணயம் எத்தீரியத்தை விட அதிக ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது.

இந்தியாவில் ஒரு நாள் வர்த்தகத்திற்கான சிறந்த கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது எப்படி? 

இப்போது எதில் முதலீடு செய்வது என்பது உங்களுக்குத் தெரியும், எப்படி செய்வது என்பதுதான் இன்னும் பதிலளிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வியாகும். 

கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்காக நிறுவப்பட்ட கட்டமைப்பு இந்தியாவில்  இன்னும் இல்லை.. இங்குதான் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் உங்கள் மீட்புக்கு வருகின்றன பல எக்ஸ்சேஞ்சுகள் நீங்கள் ஆரம்பிப்பபதற்கான பயனர் நட்பு இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதில் ஒன்றுதான் WazirX. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு கணக்கை உருவாக்கி, உங்கள் KYCஐ நிறைவு செய்து, பணத்தை டெபாசிட் செய்து, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை மற்றும் கிரிப்டோவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான்! தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளையும் கவனமாகப் படிப்பது நல்லது. அது கேட்கக்கூடிய அனைத்து ஆவணங்களும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  

பின்னர், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் முதலீடுகளைச் செய்வதுதான். இதற்கு முன்பு இது அவ்வளவு எளிதாக இருந்ததில்லை!

முடிவுரை 

இந்தியாவில் ஒரு நாள் வர்த்தகத்திற்கான சிறந்த கிரிப்டோகரன்சிகளைப் பற்றிய அறிவைக் கொண்டு, உங்கள் பட்ஜெட் மற்றும் சந்திக்கும் அபாயத்தின் அடிப்படையில் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்பும் ஒன்றை தேர்வு செய்யலாம்.. ஒரு நாள் வர்த்தக கிரிப்டோவில் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்திற்கு வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், மேலும் குறிப்பிடத்தக்க ஆதாயங்களைப் பெறுவதற்கு நீங்கள் கணிசமான மூலதனத்தை பணயமாக வைக்க வேண்டும். இங்குதான் நீங்கள் உங்கள் புறநிலை அறிவைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ மதிப்புள்ளதா இல்லையா என்பதையும் தீர்மானிக்க வேண்டும். கிரிப்டோ தொழில் வளர்ந்து செழித்து வருகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த ட்ரெண்டுகளை ஆராய்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடு செய்வதுதான்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.
Shashank

Shashank is an ETH maximalist who bought his first crypto in 2013. He's also a digital marketing entrepreneur, a cosmology enthusiast, and DJ.

Leave a Reply