Skip to main content

கிரிப்டோ கடன் கொடுத்தல் எவ்வாறு வேலை செய்கிறது? (How Does Crypto Lending Work?)

By ஏப்ரல் 19, 2022ஜூன் 2nd, 20224 minute read
How Does Crypto Lending Work?

உங்கள் வீடு அல்லது கார் போன்றவற்றின் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல், செயலாக்கக் கட்டணங்கள் அல்லது பிணையம் எதுவும் இல்லாமல் 5-15% குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம் என்று யாராவது உங்களிடம் சொன்னால் அதைக் கருத்தில் கொள்வீர்களா? ஆம், உங்கள் டிஜிட்டல் வேலட்டில் போதுமான கிரிப்டோகரன்சிகள் இருந்தால் இது சாத்தியமாகும்.

கிரிப்டோ கடன் கொடுத்தல்  எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அது  தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்வோம்.

கிரிப்டோ கடன் கொடுத்தலை புரிந்து கொள்ளல்

கிரிப்டோவை ஒரு தனிநபரிடமிருந்து பெற்று, மற்றொருவருக்கு ஒரு கட்டணத்திற்குக் கடன் கொடுப்பதன் மூலம் கிரிப்டோ கடன் கொடுத்தல் நடக்கிறது. தளத்திற்கு தளம், கடனை நிர்வகிப்பதற்கான அடிப்படை நுட்பம் மாறுபடுகிறது. கிரிப்டோ கடன் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட தளங்களில் கிடைக்கின்றன, ஆனால் அடிப்படை கருத்துக்கள் ஒரே மாதிரியானவைதான்.

இதில் பங்கேற்க நீங்கள் கடன் வாங்குபவராக இருக்க வேண்டியதில்லை. உங்கள் நிதியைக் கையாளும் ஒரு தொகுதியில் உங்கள் கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள்  செயல்பாடு எதுவும் இல்லாமல் வருமானத்தைப்  பெறலாம் மற்றும் வட்டியைப் பெறலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்மார்ட் ஒப்பந்தத்தின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்து, உங்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

Get WazirX News First

* indicates required

கிரிப்டோ கடன் கொடுத்தலை நன்கு புரிந்துகொள்வதற்கான எடுத்துக்காட்டு

உங்களிடம் பத்து பிட்காயின்கள் உள்ளன மற்றும் உங்கள் பிட்காயின் முதலீடுகளிலிருந்து நிலையான செயலற்ற வருமானத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 10 பிட்காயின்களை உங்கள் கிரிப்டோ கடன் கொடுத்தல் வேலட்டில் வைத்து, மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வட்டியைப் பெறலாம். பிட்காயின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 3% முதல் 7% வரை இருக்கும், ஆனால் USD காயின், பினான்ஸ் USD மற்றும் பிற வழக்கமான கரன்சிகள் போன்ற நிலையான சொத்துகளுக்கு 17% வரை செல்லலாம்.

கிரிப்டோ கடன் மற்றும் பியர்-டு-பியர் கடன் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், கடன் வாங்குபவர்கள் தங்கள் கிரிப்டோவை பிணையமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், முதலீட்டாளர்கள் இழப்பை ஈடுகட்ட பிட்காயின் சொத்துக்களை விற்கலாம். இருப்பினும், முதலீட்டுத் தளங்களுக்கு பெரும்பாலும் 25-50% கடனை கிரிப்டோகரன்சியில் செலுத்த வேண்டும் மற்றும் பொதுவாக பெரும்பாலான இழப்புகளை ஈடுகட்ட முடியும் மற்றும் முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பதைத் தடுக்கலாம்.

கிரிப்டோ நிதியுதவியானது அவசரநிலையின் போது உங்கள் கிரிப்டோகரன்சியை விற்காமல் அசல் பணத்தை (CAD, EUR, அல்லது USD போன்றவை) கடனாக பெற அனுமதிக்கிறது.

நடைமுறை உதாரணம்:

அலெக்ஸிடம் USD 15,000 மதிப்புள்ள ஒரு பிட்காயின் உள்ளது மற்றும் அவருக்கு 8% வருடாந்திர வட்டி விகிதத்தில் USD 5,000 கடன் தேவைப்படுகிறது.

பென் 5,000 USDஐ ஸ்டேபிள் காயின்களாக வைத்துள்ளார், மேலும் அதை 1 பிட்காயினுக்கு ஈடாக 8% வட்டி விகிதத்தில் அலெக்ஸுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்.

அலெக்ஸ், பென்னுக்கு USD 5,000 மற்றும் வட்டியை செலுத்தியவுடன் பென் அலெக்ஸுக்கு பிட்காயினைத் திருப்பித் தருவார். இந்த பரிவர்த்தனைக்கான LTV (மதிப்புக்கான கடன்) 33.33% அல்லது USD 5,000 / USD 15,000.

அலெக்ஸ் கடன் தொகையைத் திருப்பித் தரவில்லை என்றால், பென் பிட்காயினைக் பணமாக்கி அவர் கடன் தொகை போக மீதமுள்ள பணத்தைத் திரும்பத் தரலாம்.

கிரிப்டோ கடன் வழங்குவது தொடர்ந்து அதிக பிணையத்தில் உள்ளது, இது பியர்-டு-பியர் போன்ற பிற வகையான கடன்களை விட பாதுகாப்பானதாக ஆக்குகிறது.

கிரிப்டோ கடன் கொடுத்தல் எவ்வாறு வேலை செய்கிறது? 

கடன் வழங்குபவர்களும் கடன் வாங்குபவர்களும் கிரிப்டோ கடனை எளிதாக்கும் மூன்றாம் தரப்பினர் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். கிரிப்டோ கடனில் பங்கேற்கும் முதல் தரப்பினர் கடன் வழங்குபவர்களாவர். அவர்கள் சொத்துக்களின் வெளிப்பாட்டை அதிகரிக்க விரும்பும் கிரிப்டோ ஆர்வலர்களாக இருக்கலாம் அல்லது விலை அதிகரிப்பின் நம்பிக்கையில் கிரிப்டோகரன்சிகளை வைத்திருக்கும் மக்களாக இருக்கலாம்.

கிரிப்டோ கடன் வழங்கும் தளம் இரண்டாவது தரப்பினர், இங்குதான் கடன் தருதல் மற்றும் கடன் வாங்கும் பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. இறுதியாக, கடன் வாங்குபவர்கள் இந்தச் செயல்முறையின் மூன்றாம் தரப்பினர் ஆவார்கள், மேலும் அவர்கள்தான் பணத்தைப் பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் பணம் தேவைப்படும் நிறுவனங்களாக இருக்கலாம் அல்லது நிதி தேடும் தனிநபர்களாக இருக்கலாம்.

கிரிப்டோ கடன் செயல்முறைக்கு சில கட்டங்கள் உள்ளன:

  • கடன் வாங்குபவர் ஒரு தளத்திற்குச் சென்று  கிரிப்டோகரன்சி கடனுக்கு விண்ணப்பிக்கிறார்.
  • அந்த தளம் கடன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன், கடன் வாங்கியவர் கிரிப்டோவை பிணையமாக தருகிறார். கடன் வாங்கியவர் மொத்த கடனையும் திருப்பிச் செலுத்தும் வரை பிணையத்தைத் திரும்பப் பெற முடியாது.
  • கடன் வழங்குபவர்கள் உடனடியாக அந்த தளம் மூலம் கடனுக்கு நிதியளிப்பார்கள், இது முதலீட்டாளர்கள் கவனிக்க முடியாத ஒரு செயல் முறையாகும்.
  • முதலீட்டாளர்களுக்கு வட்டி முறையாக செலுத்தப்படும்.
  • கடன் வாங்கியவர் முழு கடனையும் திருப்பிச் செலுத்தும்போது, அவர் தனது கிரிப்டோ பிணையத்தை திரும்பப் பெறுவார்.

ஒவ்வொரு தளமும் கிரிப்டோகரன்சியைக் கடனளிப்பதற்கான தனித்துவமான முறையைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த செயல்முறை இவ்வாறுதான் செயல்படுகிறது.

கிரிப்டோ கடனின் நன்மைகள்

கிரிப்டோ கடன் வழங்குவதற்கான நன்மைகளின் பட்டியல் கீழே உள்ளது:

  1. நடைமுறைகள் விரைவானவை மற்றும் நேரடியானவை.

கடன் பெறுபவர்கள் பிணையத்தை வழங்கிய உடன் விரைவாக கடனைப் பெறலாம். இதில் உள்ளது இவ்வளவுதான். கூடுதலாக, இந்த செயல்முறை வழக்கமான வங்கியை விட குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் நீண்ட செயல்முறைகள் எதுவும் தேவையில்லை.

  1. கடன் வழங்குபவர்கள் அதிக வட்டியை (ROI) எதிர்பார்க்கலாம்.

வங்கிகளின் சேமிப்புக் கணக்குகள் கணிசமான வட்டி விகிதங்களை தருவதில்லை. உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு வங்கியில் வைத்திருந்தால், பணவீக்கம் காரணமாக  அதன் மதிப்பு குறையும். மறுபுறம், கிரிப்டோ கடன், வங்கிகளை விட சிறந்த வட்டி விகிதங்களுடன் இதேபோன்ற சேமிப்பு விருப்பத்தை வழங்குகிறது.

  1. பரிவர்த்தனை கட்டணங்கள் மிகக் குறைவு

கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு முறை சேவை கட்டணம் வழக்கமாக வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், வழக்கமான வங்கிகளால் விதிக்கப்படும் கட்டணத்தை விட இது பொதுவாக குறைவானதாகும்.

  1. முந்தைய கடன் சரிபார்த்தல் இல்லை.

பொதுவாக, கிரிப்டோகரன்சி தளங்கள் முந்தைய கடன் சரிபார்த்தல் இல்லாமல் கடன்களை வழங்குகின்றன. கடனைப் பெறுவதற்கு, உங்களுக்கு பிணையம் மட்டுமே தேவை. நீங்கள் அதை வழங்கினால் உங்களுக்கு கடன் கிடைக்கும்

கிரிப்டோ கடனின் தீமைகள்

கிரிப்டோகரன்சி பலனளிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிட்ட தீமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்:

  1. ஹேக்கர்களின் நடவடிக்கைகள்

ஆன்லைனில் கடன் கொடுப்பதும் கடன் வாங்குவதும் நடைபெறுவதால், உங்கள் சொத்து ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரிமினல்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்படக்கூடும். ஹேக்கர்கள் ஒரு ஸ்மார்ட் ஒப்பந்தத்தை அணுகலாம் அல்லது மோசமாக வடிவமைக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் விளைவாக பணத்தை இழக்க நேரிடும்.

  1. பணப்புழக்கம்

உங்கள் கடனை செலுத்த முடியாத அளவுக்கு உங்கள் பிணையத்தின் மதிப்பு குறையும் போது பணப்புழக்கம்  ஏற்படுகிறது. கிரிப்டோ சந்தை மிகவும் கணிக்க முடியாததாக இருப்பதால், உங்கள் பிணையத்தின் மதிப்பு வியத்தகு அளவில் குறையக்கூடும், இதனால் நீங்கள் சொத்தை பணமாக்க வேண்டியிருக்கும்.

  1. கிரிப்டோ சந்தை ஏற்ற இறக்கம்

கடன் வழங்குபவர்களுக்கு இருக்கும் தீமைகளில் ஒன்று ஏற்ற இறக்கம். நீங்கள் வழங்கும் கிரிப்டோகரன்சியின் மதிப்பீடு குறையலாம், இதன் விளைவாக வட்டி வருவாயை விட அதிகமாக இழப்பு ஏற்படும்.

இறுதியான கருத்துக்கள்

உங்களுக்கு பணம் தேவைப்படுகிறாது, ஆனால் உங்கள் கிரிப்டோ சொத்துக்களை விற்க விரும்பவில்லை என்றால், கிரிப்டோ கடன் பெறுவது பொருத்தமான விருப்பமாக இருக்கலாம். கிரிப்டோ கடன்கள் வழக்கமாக குறைந்த கட்டணம் கொண்டவை மற்றும் விரைவானவை, ஏனெனில் அவற்றுக்கு கடன் சரிபார்ப்பு தேவையில்லை. நீங்கள் நீண்ட காலமாக வைத்திருக்க விரும்பும் டிஜிட்டல் சொத்துகள் உங்களிடம் இருந்தால், அவற்றை கிரிப்டோ வட்டி கணக்கு மூலம் குத்தகைக்கு விடுவது அவற்றின் மதிப்பை அதிகரிக்க ஒரு சிறந்த முறையாகும்.

இருப்பினும், கிரிப்டோ கடன் வழங்குதல் மற்றும் வாங்குதல் ஆகிய இருபுறமும் நீங்கள் ஈடுபடும் முன், அவற்றின் அபாயங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும், முக்கியமாக உங்கள் கிரிப்டோகரன்சியின் மதிப்பீடு வியத்தகு அளவில் குறைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி. எனவே, நீங்கள் எந்த வடிவத்திலும் கிரிப்டோ கடன் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், முடிவெடுப்பதற்கு முன், நன்மைகள் மற்றும் தீமைகள் மற்றும் உங்களின் பிற தேர்வுகள் அனைத்தையும் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply